ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக லக்னோ நகரில் நிகழ்ந்த சுதந்திரப்போராட்ட கலகத்தில் பங்கேற்றவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த நினைவுச்சின்னமும் அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அக்கால கட்டத்தில் உருவான புரட்சியின் மையக்கேந்திரமாக லக்னோ நகரம் சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ரெசிடென்சி பில்டிங் எனப்படும் கட்டிடத்தின் இணைப்பாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள காட்சி அமைப்புகள் சுதந்திரப்போராட்ட வரலாற்றை துல்லியமாக விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ரெசிடென்சி ஸ்தலத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள், ஒரு கைத்துப்பாக்கி, பீங்கான் பொருட்கள், ஒயின் பாட்டில்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், ஷீல்டுகள், வண்ண அச்சுப்பிரதிகள், ஆயுதங்கள், பீரங்கிக்குண்டுகள், துப்பாக்கிகள், மஸ்கெட்டுகள் எனும் தோள் துப்பாக்கிகள், அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு ஞாபகார்த்தப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த எல்லா காட்சிப்பொருட்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் காலக்கிரமமான ஒழுங்குடன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. லக்னோ நகரத்தின் அமைப்பு குறிந்த பல வரைபடங்களும், ரெசிடென்சி வளாகத்தின் ஒரு மாதிரி அமைப்பும் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
நினைவுக்கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் தரையடித்தளத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தரைத்தளத்தில் நான்கு காட்சி அமைப்புகளும் தரையடித்தளத்தில் ஏழு காட்சி அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.