ஃபிராங்கி மஹால் எனும் இந்த மாளிகை லக்னோ நகரத்தில் விக்டோரியா ரோடு மற்றும் சௌக் ஆகிய இடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த கம்பீரமான வரலாற்றுச்சின்னம் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது என்பதால் ஃபிராங்கி மஹால் என்று அழைக்கப்படுகிறது.
இது நீல் எனும் ஃபிரெஞ்சு வணிகருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் காலத்தில் இங்கு வசித்த மற்ற ஃபிரெஞ்சு வணிகர்களோடு அவர் வசித்துள்ளார்.
இருப்பினும் பின்னர் ஔரங்கசீப் மன்னர் இந்த மாளிகையை அன்னியர் வசம் உள்ள சொத்தாக மதிப்பிட்டு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கிக்கொண்டார். அத்தோடு அம்மாளிகையை இஸ்லாமிய விவகாரங்களில் மன்னருக்கு ஆலோசனை அளித்துவந்த முல்லா ஆசாத் பின் குதப் ஷாஹீத் மற்றும் அவரது சகோதரர் முல்லா ஆஸாத் பின் குத்புதீன் ஷாஹீத் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.
இந்த இரண்டு சகோதரர்களும் அந்த மாளிகையை ஒரு பெரிய இஸ்லாமிய கல்வி மையமாக மாற்றினர். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகங்களுக்கு இணையான தரத்துடன் அந்த கல்வி மையம் உருவாக்கப்பட்டது.
மஹாத்மா காந்தி அவர்கள் இந்த ஃபிராங்கி மஹால் மாளிகையில் சில நாட்கள் தங்கியுள்ளார். அவரது நினைவாக அந்த அறை அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்ரவற்றை வளர்க்கும் முயற்சிகளில் இந்த ஃபிராங்கி மஹால் மையம் ஈடுபட்டு வந்துள்ளது.