ஷா நஜஃப் இமாம்பாரா எனும் இந்த முக்கியமான சுற்றுலா அம்சம் லக்னோவில் பிரசித்தமான ஒரு நினைவுச்சின்னமாகும். இது ஆவாத் வம்சத்தின் ஐந்தாவது நவாப் ஆன நவாப் காஜி உத் தின் ஹைதர் என்பவரால் 1816-17ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
அவரது விருப்பப்படியே அவர் மற்றும் அவரது மனைவியரான சர்ஃபாராஸ் மஹால், மும்தாஜ் மஹால் மற்றும் முபாரக் மஹால் ஆகியோர் இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த கம்பீரமான கட்டிடம் வெண்ணிற குமிழ் மாடக்கோபுரத்தைக்கொண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான மசூதியுடன் வெளிப்புற சுற்றுச்சுவர் அமைப்பையும் கொண்டதாக கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தற்போதைய சஹாரா கஞ்ச் ஷாப்பிங் மால் வளாகத்திற்கு வெகு அருகில் இந்த ஷா நஜஃப் இமாம்பாரா உள்ளது.
ஈராக் நாட்டிலுள்ள நஜாஃப் நகரத்தில் அமைந்திருக்கும் இமாம் ஹஜ்ரத் அலி ரௌஸா எனும் அமைப்பை போன்றே இந்த இமாம்பாரா கட்டப்பட்டிருப்பது இதன் தனித்தன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.
இதன் மையக்கூடம் வெகு நுட்பமாக அலங்கரிக்கப்பட்டு வரலாற்று புகைப்படங்கள் மற்றும் இதர நினைவுப்பொருட்களோடு காணப்படுகிறது.
இந்த இமாம்பாராவின் அலங்காரம் மற்றும் பராமரிப்புப்பணிகளுக்கென ஆங்கிலேயர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நவாப் அதற்கென ஒரு பெருந்தொகையை அளித்துள்ளார்.