தாலுக்தார் ஹால் எனப்படும் இந்த இரண்டடுக்கு சுடுமண் நிற மாளிகை மூன்றாவது ஆவாத் நவாப்பான முஹமது அலி ஷா’வால் 1838ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஒரு வருடம் கழித்து இதன் எதிரே ஒரு தடாகமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த மாளிகை அதன் ஒரு புறத்தில் ஒரு சிறிய மசூதியையும் மறுபுறத்தில் ஹமாம் எனப்படும் பொதுக்குளியல் கூடத்தையும் கொண்டிருக்கிறது.
தாலுக்தார் ஹால் மாளிகையில் இந்நகரத்தை ஆண்ட பல மன்னர்களின் உருவ ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள ஓவியங்கள் ஐரோப்பிய ஓவியக்கலைஞர்களான ஹாரிசன், டாவ்லிங், கிராவெட் மற்றும் டி.எஸ்.சிங் போன்றோரால் வரையப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் டி.எஸ்.சிங் 1882 முதல் 1885 வரை மூன்றாண்டுகள் இந்தியாவில் வசித்துள்ளார். ஆங்கிலேய அரசாங்க இந்த ஓவியங்களை ஆவாத் பிரதேச தாலுக்காதாரர்களாக இருந்த அஞ்சுமான் வம்சத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறது.
இந்த ஓவியங்களை எந்த திசையிலிருந்து பார்த்தாலும் ஓவியத்தின் கண்களும் வாளின் முனையும் பார்வையாளரை நோக்கியதாகவே காட்சியளிக்கும்படி வரைப்பட்டிருப்பது ஒரு விசேஷமான அம்சமாகும்.