மஹாவிஷ்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த அழகர் கோயிலானது மதுரை மாநகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் சோலைமலை அடிவாரத்தில் வீற்றுள்ளது. இக்கோயில் பல நுணுக்கமான கற்சிற்ப வேலைப்பாடுகளுக்கும் கலையம்சம் பொருந்திய சிலைகளுக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
கல்லால் ஆன ஒரு பிரமாண்ட விஷ்ணு சிலையை இங்கு பக்தர்கள் தரிசிக்கலாம். வெவ்வேறு கோலத்தில் காட்சியளிக்கும் விஷ்ணுவின் சிலைகளையும் இங்கு பார்க்கலாம்.
இக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள இயற்கை ஊற்றிலிருந்து பெறப்படும் நீரால் கோயிலில் வீற்றிருக்கும் பஹவானுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. கோயில் அர்ச்சகர் மூலம் நேரடியாக இந்த அபிஷேக நீர் ஊற்றிலிருந்து எடுத்துச்செல்லப்படுகிறது.
மீனாட்சி அம்மனின் சகோதரராக விஷ்ணு பஹவான் இந்த அழகர் கோயிலில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. யாத்ரீகர்கள் மற்றும் பயணிகள் விஜயம் செய்யவேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாக இது திகழ்கிறது.