கோரிப்பாளையம் தர்க்கா மதுரையிலேயே மிகப்பெரிய மசூதியாக வீற்றுள்ளது. இது வைகை ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த மசூதி திருமலை நாயக்கரால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
ஹஸ்ரத் சுல்தான் அலவுதீன் பாதுஷா மற்றும் ஓமன் சுல்தான் ஷம்சுதீன் பாதுஷா ஆகிய இரண்டு இஸ்லாமிய யோகிகளின் கல்லறைகள் இந்த மசூதி வளாகத்தில் உள்ளன. இந்த தர்க்காவின் குமிழ் மாடங்கள் 70 அடி விட்டமும் 20 கொண்டவையாக ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இந்த புராதன அமைப்பின் வாசலிலேயே இது உருவாக்கப்பட்ட காலகட்டம் குறித்த தகவல்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.
வருடாந்திர உருஸ் திருவிழாவானது ஹிஜ்ரி காலண்டரின் ரபி அல் அவ்வல் மாதத்தில் சிறப்பாக இந்த தர்க்காவில் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்த தர்க்கா ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர்.