முருகப்பெருமானுக்கான இந்த பழமுதிர்ச்சோலை கோயில் மதுரை மாநகரில் அழகர் கோயிலுக்கு அருகில் சோலைமலை உச்சியில் அமைந்துள்ளது. முருகன் திருத்தலங்களில் முக்கியானதாக பிரசித்தி பெற்றிருக்கும் இக்கோயிலின் விக்கிரகம் தங்கத்தேரில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்போது ஏராளமான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர்.
நாபுரகங்கை எனும் இயற்கை நீரூற்று ஒன்றும் இந்த கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் புனிதநீராடலில் ஈடுபடுகின்றனர். மரம் மற்றும் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட முருகப்பெருமானின் சிலைகளை இக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கலாம். பிரம்மாண்டமான படிக்கட்டுகள் மூலமாக பக்தர்கள் கோயிலுக்கு ஏறிச்செல்லலாம்.