மதுரைக்கு வெகு அருகில் 8 கி.மீ தூரத்தில் திருப்பரங்குன்றம் எனும் முருகன் ஸ்தலம் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலைப்பாறை குன்றின்மீது பிரசித்தமான முருகன் கோயில் அமைந்துள்ளது.
முருகன் கோயில் தவிர ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் எனும் தர்க்காவும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய ஆன்மீக அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. முருகப்பெருமானுக்கான அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயில் ஒரு பாறைக்குன்றை குடைந்தாற்போன்று அமைக்கப்பட்டிருப்பது தனித்தன்மையான அம்சமாகும்.
எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலில் சிவன், விஷ்ணு மற்றும் துர்க்கா போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். சந்திரனையும் சூரியனையும் ஒரே நேரத்தில் தரிசிக்க உதவும் ஸ்தலமாக அமைந்திருப்பதும் இந்த கோயிலின் விசேஷமாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் முருகப்பெருமானின் திருமணம் இக்கோயிலில் நடைபெற்றதாக நம்பப்படுவதால் திருமண சுபதினங்களில் இங்கு ஏராளமான திருமணசடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.