மதுரைக்கு அருகே உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த வைகை அணை. இது தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கான விவசாய நீராதாரமாக வைகை அணை திகழ்கிறது.
மேலும் அணைக்கருகிலேயே தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. இந்த மையமானது நெல், பருத்தி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.
வைகை நீர்மின்னுற்பத்தி திட்டமும் இந்த அணையில் இயங்கி வருகிறது. ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த வைகை அணை அமைந்துள்ளதால் சுற்றுலா ரசிகர்களுக்கு பிடித்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
அணை நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அமைதியான ஒரு பிக்னிக் சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இந்த வைகை அணைப்பகுதி அமைந்துள்ளது.