இங்குள்ள மஹாபலேஷ்வர் கோயில் சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மஹாபலேஷ்வர் எனும் பெயர் மஹாபலி என்ற சர்வ வல்லமை படைத்த தெய்வத்தை குறிக்கும் வண்ணம் பிறந்துள்ளது. இந்த கோயில் இரண்டு பிரதான பிரிவுகளை கொண்டுள்ளது. ஒன்று கருவறை மற்றொன்று வெளிப்பிரகாரம்.
இந்த புனித ஸ்தலமானது 16 ம் நூற்றாண்டில் சந்தா ராவ் மோரே ராஜ வம்சத்தால் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த கோயிலின் கட்டிடக்கலை வடிவமைப்பு ஹேமதந்த் கலையம்சத்தை பின்பற்றி கட்டப்பட்டிருக்கிறது.