மாமல்லபுரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் இந்த முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு பலவித முதலைகள் மற்றும் பாம்பு வகைகளை பார்க்கலாம். ரோமுலஸ் விட்டேகர் எனும் பிரபல உயிரின ஆராய்ச்சியாளரால் 1976ம் ஆண்டு இந்த பூங்கா துவங்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஆப்பிரிக்க முதலைகளை பாதுகாப்பான சூழலில் வளர்த்து இனப்பெருக்கம் செய்விக்கும் நோக்கத்துடன் இந்த பண்ணை துவங்கப்பட்டிருக்கிறது. இன்று 5000 த்துக்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து இந்த முதலைகள் இயற்கை சூழலில் திறந்த வெளி குளங்களில் வசிப்பதை பார்த்து ரசிக்கலாம்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணையான இது 3.2 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இந்த வளாகத்திலுள்ள முதலை பாதுகாப்பு மையத்தில் இனப்பெருக்க செய்விக்கப்படும் முதலைகள் சம்பல் மற்றும் மஹாநதி போன்ற ஆறுகளில் விடப்படுகின்றன.
இந்த பண்ணையில் இருளர் இனத்தவர் பாம்பு விஷம் சேகரிப்பது குறித்த காட்சி விளக்கங்களை பார்வையாளர்களுக்கு அளிக்கின்றனர். முதலைப்பண்ணைக்கு விஜயம் செய்ய 30 ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.