18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள ஹோல்கர் கோட்டை, மத்தியப்பிரதேசத்தின் மஹேஷ்வரில் உள்ள ஒரு பிரமாதமான சுற்றுலாத் தலமாகும். நர்மதா நதியின் அழகிய கரையோரத்தில் அமைந்துள்ள ஹோல்கர் கோட்டை, அஹில்யா கோட்டை என்றும் பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த அஹில்யா...
நர்மதா படித்துறை 18 ஆம் நூற்றாண்டில், ஹோல்கர் மாநிலத்தின் அப்போதைய ஆட்சியாளராக விளங்கிய மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டுள்ளது. நர்மதா நதி இந்தியாவின் புண்ணிய தீர்த்தங்களுள் மிகவும் புனிதமானதாக நம்பப்படுகிறது.
எப்போது கங்கை தான் அசுத்தமாக...
ராஜராஜேஸ்வரா கோயில் நர்மதா நதியின் அமைதியான, சலனமற்ற கரையோரத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரா கோயில் சிவபெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ள பல கோயில்களுள் ஒன்றாகும்.
இக்கோயில் அஹில்யேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. அஹில்யேஷ்வர் கோயிலிலிருந்து கற்கள்...
மஹேஷ்வர் படித்துறைகள் ஆளரவமற்று காணப்பட்டதாக சரித்திரமே இல்லை. குறிப்பாக பேஷ்வா, அஹில்யா மற்றும் ஃபெனீஸ் படித்துறைகள் நர்மதா நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளாகும்.
ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் இந்த படித்துறைகளில் அமர்ந்து பல மணி...
என்ஹெச்-3 –இல் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஸ்ராவத், தனிச்சிறப்பு வாய்ந்த வடிவமைப்புடன், கண்கவர் வண்ணங்களில் நெய்யப்படும் நூல் புடவைகளுக்கு, மஹேஷ்வருடன் சேர்ந்து பிரபலமாக விளங்குகிறது.
கஸ்ராவத் அடிப்படையில் ஒரு வியாபார மையமாகும்....
மண்டலேஷ்வர், மத்தியப்பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிறு நகரமாக இருப்பினும், வரலாறு மற்றும் மத ரீதியிலான முக்கியத்துவம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க நகரமாகும்.
மண்டலேஷ்வர், புண்ணிய நதியான நர்மதாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. காஷி...
புனிதமான நர்மதா நதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள காலேஷ்வர் கோயில் 12 ஆம் நூற்றாண்டு ஏடியைச் சேர்ந்த ஒரு சிறு கோயிலாகும். இங்கு வழிபடப்படும் தெய்வமான காலேஷ்வர், அழிவைத் தள்ளி வைக்கக்கூடிய கடவுளான சிவபெருமானின் வடிவமாகக் கருதப்படுகிறார்.
ஒரு உயரமான...
அஹில்யேஷ்வர் கோயில், மஹேஷ்வரில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கோயிலாகும். புனிதமான நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ராமபிரானின் திருவுருவச்சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அஹில்யேஷ்வர் கோயில் மஹேஷ்வரில் உள்ள...
ஜலேஷ்வர் கோயில் மஹேஷ்வரில் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட முக்கிய கோயிலாக கம்பீரமாக நிற்கின்றது. இக்கோயில் நீருக்கான தெய்வத்தை மூலவராகக் கொண்டுள்ளது.
கங்கை நதி சுவர்க்கத்தில் இருந்து விழுந்தபோது உண்டாகக்கூடிய பாதிப்புகளிலிருந்து சிவபெருமான் உலகைக்...
ஸ்வாத்யாய பவன் ஆசிரமம் ஒவ்வொரு வருடமும் பல நூறு பக்தர்கள் வந்து செல்லும் இடமாகத் திகழ்கிறது. மஹேஷ்வரில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் மஹாமிருத்யுஞ்சயா ரத யாத்திரையின் தொடக்கப் புள்ளியாக விளங்கும் இடத்தில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.
இந்த ரத யாத்திரை,...
பண்டரிநாத் கோயில், மஹேஷ்வரில் உள்ள ஒரு முக்கியமான கோயிலாகும். இவ்விடத்தில் காணப்படும் பிற கோயில்களைப் போல் அல்லாமல், இக்கோயில் மஹாவிஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் நம்பிக்கைகளின் படி, மஹாவிஷ்ணு, புனிதமான இந்து மாதமான ஸ்ரவன் மாதத்தில் வரும்...
சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள தில்பனேஷ்வர் கோயில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அதன் கதவுகள் மற்றும் உப்பரிகைகள் கொண்ட கட்டுமானத்திற்காகவே புகழ் பெற்றுள்ளது.
இக்கோயிலில் குடி கொண்டுள்ள மூலவரின் சிலை வளர்ந்து கொண்டே வருவது இதன் சிறப்பம்சமாகும்....
காஷி விஷ்வநாத் கோயில், புனித பூமியான மஹேஷ்வரில் அமைந்துள்ள மற்றுமொரு பிரபலமான கோயிலாகும். இக்கோயில் சிவபெருமானின் ஜோதிர்லிங்க வடிவத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வியக்க வைக்கும் கட்டுமானம் மற்றும் அழகுடன் காட்சியளிக்கும் இக்கோயில், ராணி அஹில்யா பாய்...