காஷி விஷ்வநாத் கோயில், புனித பூமியான மஹேஷ்வரில் அமைந்துள்ள மற்றுமொரு பிரபலமான கோயிலாகும். இக்கோயில் சிவபெருமானின் ஜோதிர்லிங்க வடிவத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வியக்க வைக்கும் கட்டுமானம் மற்றும் அழகுடன் காட்சியளிக்கும் இக்கோயில், ராணி அஹில்யா பாய் ஹோல்கரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒரு முறை இங்கு வந்து இக்கோயிலில் குடி கொண்டுள்ள ஜோதிர்லிங்கத்திடம் பிரார்த்தனை செய்தால் அவர்தம் வாழ்வின் பிரச்சினைகள் மற்றும் வலிகள் அனைத்தும் நிவர்த்திக்கப்பட்டு விடும் என்பது ஐதீகம்.
மஹேஷ்வரின் சுற்றுலாவில் இக்கோயிலின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். ஜோதிர்லிங்கத்தின் தரிசனம் மிக புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கண நேரம் இந்த ஜோதிர்லிங்கத்தை தரிசிக்கும் வாய்ப்பைப் பெறும் பக்தர்கள் தம் வாழ்வின் சன்மார்க்கத்தை உணர்வர்.
காஷி விஷ்வநாத் கோயில் தொன்று தொட்டு நாட்டின் உயர்வான ஆன்மீக அமைப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. இந்த கோயிலின் இருப்பு இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் புனிதமாக்கக்கூடியதாக உள்ளது.
இக்கோயில் தினந்தோறும் பல நூறு மக்கள் வந்து செல்லும் ஒரு இடமாக விளங்குகிறது. மஹேஷ்வரின் ரம்மியமான வானிலை, உலகெங்கிலுமிருந்து புனிதமான காஷி விஷ்வநாத் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சாதகமாக உள்ளது.