மண்டலேஷ்வர், மத்தியப்பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிறு நகரமாக இருப்பினும், வரலாறு மற்றும் மத ரீதியிலான முக்கியத்துவம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க நகரமாகும்.
மண்டலேஷ்வர், புண்ணிய நதியான நர்மதாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. காஷி விஸ்வேஷ்வரா, ராமர் கோயில், கங்கா-ஸீரா ஆகிய கோயில்கள் மண்டலேஷ்வரின் ஈர்ப்புகளாகும்.
ஸ்ரீ தத்தா கோயில் மற்றும் சப்பன்-தேவ் கோயில்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஹத்தானி, சகஸ்த்ரத்ரா, ராம்குந்த் மற்றும் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களும் இங்கு உள்ளன.
இது பல காலத்துக்கு முந்தைய ராஜ்ஜியத்தைச் சேர்ந்தது; ஆதலால் இங்குள்ள புராதன கட்டடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவைகளாகும். மண்டலேஷ்வர் மக்கள் ஹோலிப் பண்டிகை, நர்மதா ஜெயந்தி, தீபாவளி, கணேஷ் சதுர்த்தி போன்ற வைபவங்களை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
மண்டலேஷ்வரில் உள்ள ராம் காட் என்ற படித்துறை இந்நகரின் மற்றுமொரு பிரபலமான ஸ்தலமாகும். சமீப காலங்களில் மண்டலேஷ்வர் நிறைய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நவீன வளர்ச்சி ஆகியவற்றின் கலவையாகக் காணப்படும் இந்நகரம், இம்மாவட்டத்தைச் சேர்ந்த இதன் சுற்றுப்புற நகரங்களிலிருந்து வேறுபட்டு, தனிச்சிறப்போடு விளங்குகிறது.