பண்டரிநாத் கோயில், மஹேஷ்வரில் உள்ள ஒரு முக்கியமான கோயிலாகும். இவ்விடத்தில் காணப்படும் பிற கோயில்களைப் போல் அல்லாமல், இக்கோயில் மஹாவிஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் நம்பிக்கைகளின் படி, மஹாவிஷ்ணு, புனிதமான இந்து மாதமான ஸ்ரவன் மாதத்தில் வரும் பௌர்ணமியின் எட்டாவது நாளான கிருஷ்ண பக்ஷா என்றழைக்கப்படும் தேய்பிறை நாளின் போது பண்டரிநாத் ஆக அவதாரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது துவாபார யுகத்தின் முடிவில் நிகழ்ந்துள்ளது. மஹாவிஷ்ணுவை மக்கள் பண்டரிநாத் அல்லது விட்டலா என்ற வடிவில் வழிபட்டு வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புகழ் பெற்ற வைஷ்ணவா முனிவர்கள் பண்டரிநாத் வழிபாட்டின் முக்கியத்துவத்தை தங்கள் பாடல்கள், கீர்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் எளிய மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.
பண்டரிநாத் கோயில், புராணங்களில் வரும் பாத்திரங்களின் தேர்ந்த சிற்ப வடிவங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கவிந்திருக்குமாறு காணப்படும் இக்கோயிலின் உப்பரிகைகளிலும் எழில் பொங்கும் சிற்பங்களைக் காணலாம்.
நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோயிலின் கதவுகள் மிக நேர்த்தியான கலைத்திறனுக்கு சான்றாகத் திகழ்கின்றன.