ராஜராஜேஸ்வரா கோயில் நர்மதா நதியின் அமைதியான, சலனமற்ற கரையோரத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரா கோயில் சிவபெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ள பல கோயில்களுள் ஒன்றாகும்.
இக்கோயில் அஹில்யேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. அஹில்யேஷ்வர் கோயிலிலிருந்து கற்கள் பதிக்கப்பட்ட அழகிய பாதை ஒன்று இக்கோயிலுக்கு இட்டுச் செல்கிறது.
ராஜராஜேஸ்வரா கோயிலிலிருந்து பார்த்தால் நர்மதா நதியின் படித்துறையில் உள்ள ஏராளமான சிவலிங்கங்கள் மற்றும் நந்தி சிலைகளைக் காணலாம். சிவபெருமானின் அருளை வேண்டி இந்த அற்புதமான சிவன் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பகதர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இக்கோயில் அகாந்த் ஜோதி தீபக் என்றழைக்கப்படும் சாஸ்வதமாக எரியும் விளக்குகள் பதினொன்றைக் கொண்டிருக்கும் பெருமை பெற்றதாகும்.
அகாந்த் ஜோதி தீபக்கின் சிறப்பியல்பு என்னவெனில் இவை எப்போதும் அணைவதற்கு அனுமதிக்கப்ப்டுவதில்லை; தேவையான அளவு நெய் இவ்விளக்குகளில் தொடர்ந்து ஊற்றப்பட்டு இவை சாஸ்வதமாக எரியுமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது.
மஹேஷ்வரில் உள்ள பிற கோயில்களைப் போன்றே இக்கோயிலும் தன் சுவர்களில் தேர்ந்த கட்டுமான பாணியைக் கொண்டு காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேற்கூரையில் பன்முக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.