ஸ்வாத்யாய பவன் ஆசிரமம் ஒவ்வொரு வருடமும் பல நூறு பக்தர்கள் வந்து செல்லும் இடமாகத் திகழ்கிறது. மஹேஷ்வரில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் மஹாமிருத்யுஞ்சயா ரத யாத்திரையின் தொடக்கப் புள்ளியாக விளங்கும் இடத்தில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.
இந்த ரத யாத்திரை, ஆயுர்வேத மருத்துவத்தில் பேர் பெற்று விளங்கிய ஆயுர்வேத் மூர்த்தி பகவான் சதாசிவ மஹாமிருத்யுஞ்சயா அவர்களை நினைவு கூரும் வண்ணம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
முதன்முதலாக ஸ்ரீ ஹர்விலாஸ் ஆசோப்பா அவர்களால் நடத்தப்பட்ட ரத யாத்திரை போல் அதற்கு முன் எதுவும் நடத்தப்பட்டதில்லை. இது சமூக நலனை கருத்தில் கொண்டே நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரை மேலான மருத்துவரின் நினைவாக அவரது ஆசீர்வாதத்தை வேண்டி நடத்தப்படுகிறது.