இந்த கோவிலில் சாண்டெலா வம்சத்தின் பாதுகாவலர்களாக விளங்கிய மதிப்பிற்குரிய தெய்வம் மனைய தேவியின் சிலை உள்ளது. மதன் சாகர் ஏரி கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் அருகே பிர் முபாரக் ஷாவின் கோவிலும் அமையப்பெற்றிருக்கிறது.
இவர் கி.பி 1252 ம் ஆண்டு அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த ஒரு முஸ்லீம் மகான் ஆவார். மனைய தேவி கோவிலில் உள்ள ஒரு முக்கிய அம்சம் இங்குள்ள தூண் ஆகும். இது 18 அடி உயரம் மற்றும் 1.75 அடி அகலம் கொண்ட கருங்கல்லால் ஆனது.