உத்திரபிரதேச மாநிலம் மஹொபா மாவட்டத்தில் உள்ள கோர்கா அல்லது குக்ஹர் மலைகளில் அமைந்துள்ள சிவதாண்டவ கோவில் புகழ் பெற்ற ஒன்றாகும். இங்கு நடனமாடும் சிவன், அவருடைய ஆனந்த தாண்டவ கோலத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய சிலை உள்ளது.
இந்த சிலை ஒற்றை கருங்கல்லால் ஆனது. இந்த சிலையின் ஒரு பக்கத்தில் பால் போன்ற வெள்ளை தண்ணீரை வெளிப்படுத்தும் ஒரு நீரூற்று காணப்படுகிறது. இதற்கு கோராக் மலையிலிருந்து தண்ணீர் வருகிறது.
தாண்டவ வடிவிலான சிவன் சிலை இந்த பகுதியில் அரிதான ஒன்றாகும். மேலும், இந்த கோவிலுக்கும் சிவதாண்டவத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது.