சாத்ரா எனப்படும் மடாலயங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ள மாஜூலி தீவில் உள்ள மற்றொரு முக்கியமான சாத்ரா இந்த பெங்கநாடி சாத்ரா ஆகும். கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல அரும்பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீமந் ஷங்கர்தேவா குருவின் வளர்ப்புத்தாயாரின் பேரனான முராரிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட ஒரு நிகழ்த்துகலை மையமும் இந்த பெங்கநாடி சாத்ரா வளாகத்தில் செயல்பட்டுவருகிறது.
ஸ்ரீமந் ஷங்கர்தேவா குரு உருவாக்கிய வைணவ கருத்துகளை பரப்பும் பணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் சார்ந்த பழமையான அரும்பொருட்களை பாதுகாப்பது போன்றவற்றை இந்த சாத்ரா நோக்கமாக கொண்டிருக்கிறது.
இங்குள்ள அரும்பொருட்களில் ஆஹோம் வம்ச மன்னரான ஸ்வர்க்கதேவ் கடாதர் சிங்கா’வால் அணியப்பட்ட ஒரு அங்கி ஒன்று குறிப்பிடத்தக்கது. இந்த தங்க அங்கி மட்டுமல்லாது ஆஹோம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கக்குடை ஒன்றையும் இந்த சாத்ராவில் பார்க்கலாம்.
பெங்கநாடி சாத்ராவுக்கு விஜயம் செய்ய விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ஜொர்ஹாட் நகரத்தில் உள்ள நிமாடி காட் எனும் படகுத்துறையிலிருந்து ஃபெர்ரி படகு மூலம் சென்றடையலாம்.