மாஜூலி தீவிலிருந்து 110 கி.மீ தூரத்தில் வடக்கு லகிம்பூர் பகுதியில் இந்த செடியா காவ்ன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.
இங்கு ஓடும் சுபன்சிரி ஆற்றை ஆற்றை பார்த்து ரசிப்பதற்காக மாஜூலி தீவிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த செடியா காவ்ன் ஸ்தலத்துக்கும் விஜயம் செய்கின்றனர்.
சுபன்சிரி ஆறு அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திராவுக்கு அடுத்த பெரிய ஆறாகும். இந்த ஆற்றின் கரைப்பகுதிகளில் காணப்படும் தாவரச்செழிப்பு மற்றும் காட்டுயிர் வளம் போன்றவை இயற்கை ரசிகர்களுக்கு பிடித்தமான அம்சமாக விளங்குகின்றன.
மிக வேகமான நீரோட்டத்தை கொண்டுள்ள இந்த சுபன்சிரி ஆற்றில் நாட்டிலேயே மிகப்பெரியதான நீர்மின்நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த செடியா காவ்ன் சுற்றுலாப்பிரதேசம் சாகசத்தை விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு பிடிக்கும்படியாக பல மலையேற்றப்பாதைகளையும் ஆற்றங்கரையை ஒட்டிய வனப்பகுதிகளில் கொண்டிருக்கிறது.
கோகாமுக் போர்டோலோனி, தபாலியாகாவ்ன் மற்றும் தக்குவாகானா போன்ற இதர முக்கிய சுற்றுலா அம்சங்களால் இந்த செடியா காவ்ன் சூழப்பட்டிருப்பது மற்றொரு விசேஷ அம்சம்.
அது மட்டுமல்லாமல் இங்கு கிடைக்கும் வித்தியாசமான உணவு வகைகளின் சுவையையும் பயணிகள் ருசிக்கலாம். இந்த உணவு வகைகள் சுற்றுலாப்பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகின்றன.