மாஜூலி தீவுப்பகுதியில் உள்ள முக்கியமான ஒரு ஆன்மீக மற்றும் புனித ஸ்தலமாக இந்த கமலாபரி சாத்ரா பிரசித்தமடைந்துள்ளது. ஷீமண்ட ஷங்கர்தேவா எனும் ஆன்மீக குருவால் வளர்க்கப்பட்ட புதிய வைணவ மார்க்கம் இந்த தீவை மையமாக கொண்டுதான் அஸ்ஸாம் மாநிலப்பகுதியில் பரவியிருக்கிறது.
மாதவதேவா எனும் மற்றொரு குருவின் சீடரான படலா அடா என்பவரால் 1595ம் ஆண்டில் இந்த மடாலயம் துவங்கப்பட்டிருக்கிறது.
இந்த கமலாபரி சாத்ரா’வானது கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் போன்ற அம்சங்களை போற்றி வரும் மையக்கேந்திரமாக பல நூற்றாண்டுகளாக இயங்கிவருகிறது.
கமலாபரி சாத்ரா மூலமாகத்தான் சாத்ரியா நடனம் ஒரு முக்கியமான பாரம்பரிய நடனவடிவம் எனும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின் போது அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் இந்த சாத்ரா தற்போது பெருமளவில் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.புராணிக நம்பிக்கைகள் சார்ந்த சிலைகளின் உருவாக்கத்திற்கும் இந்த சாத்ரா பிரசித்தி பெற்றிருக்கிறது.
மழைக்காலம் முடிந்து வெள்ளப்பாதிப்புகளிலிருந்து தீவுப்பகுதி மீண்டபிறகு இந்த கமலாபரி சாத்ராவுக்கு விஜயம் செய்வது சிறந்தது. ஜோர்ஹாட் நகரத்திற்கு அருகில் உள்ள நிமாடி காட் எனும் படகுத்துறையிலிருந்து ஃபெர்ரி படகு மூலம் இந்த சாத்ராவுக்கு விஜயம் செய்யலாம்.