ஷாமாகுரி சாத்ரா மாஜூலி தீவுப்பகுதியின் முக்கிய கவர்ச்சி அம்சங்களில் ஒன்றாகவும் வைணவ ஆன்மிக ஸ்தலமாகவும் அமைந்திருக்கிறது. முகமூடி தயாரிப்பு மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பு போன்ற அம்சங்களுக்காக இந்த சாத்ரா பல காலமாக சுற்றுலாப்பயணிகளால் ரசிக்கப்பட்டு வருகிறது.
கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்களுக்கான ஒரு முக்கியமான மையமாக இந்த ஷாமாகுரி சாத்ரா விளங்குகிறது. இங்கு பல்வகை கைவினைத்திறன்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக முகமூடிகள் தயாரிப்பது குறித்த பாரம்பரியமான கலைநுணுக்கங்கள் இந்த சாத்ராவில் கற்றுத்தரப்படுகின்றன.
ஷாமாகுரி சாத்ராவுக்கு விஜயம் செய்ய ஜோர்ஹாத் நகரத்தை அடைந்து அங்குள்ள நிமாடி காட் எனும் படகுத்துறையிலிருந்து ஃபெர்ரி மூலம் மாஜூலி தீவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அல்லது லக்கிம்பூர் பகுதியில் உள்ள லூயித் கபோலுகாட் என்ற இடத்திலிருந்தும் மாஜூலி தீவிற்கு பயணம் செய்யலாம். குளிர்காலமே இந்த ஷாமாகுரி சாத்ராவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.
இக்காலத்தில் வெப்பநிலை இதமாகவும், பிரம்மபுத்திரா ஆறு அமைதியான நீரோட்டத்துடனும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.