மலம்புழா தோட்டம் மற்றும் அணைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ராக் கார்டன், இந்தியாவின் இரண்டாவது பாறைப் பூங்காவாகவும், கேரளாவில் அமையபெற்ற முதல் பாறைப் பூங்காவாகவும் கருதப்படுகிறது.
இந்த மனதை மயக்கும் கலைப்படைப்பு புகழ்பெற்ற சிற்பி பத்மஸ்ரீ லௌரேட் நெக் சாந்த் சைனி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சண்டிகரில் உள்ள இந்தியாவின் முதல் பாறைப் பூங்காவையும் நெக் சாந்ததான் உருவாக்கினார்.
1996-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ராக் கார்டன் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள கைவினை பொருட்கள் யாவும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த வளையல்கள், பவர் இன்சுலேட்டர்ஸ், மெலமைன் பாத்திரங்கள், உடைந்த ஓடுகள் போன்ற உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டவை.