மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் விஷமற்ற பாம்புகள் வனத்துறையினரின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஊரவன் மீட்பு மையமாக செயல்பட்டு வரும் இந்த பூங்காவுக்கு காயம்பட்ட எத்தனையோ பாம்புகள் கொண்டுவரப்படுகின்றன.
1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாம்பு பூங்காவில் ராஜ நாகம், பழுப்பு வைன் பாம்பு, கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ஓநாய் பாம்பு உள்ளிட்ட பாம்பு இனங்களை நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். மேலும் இந்தப் பூங்காவில் தண்ணீர் பாம்புகள் மற்றும் முதலைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.