கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை ஆகிய மூன்றும் சங்கமிக்கும் வித்தியாசமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
மலயாட்டூர் நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது ஏசுநாதரின் சீடர்களில் ஒருவராக அறியப்படும் செயின்ட் தாமஸுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்க தேவாலயமாகும்.
இந்த தேவாலயம் கிறிஸ்தவர்களின் யாத்ரீக மையமாக மட்டுமல்லாமல் அதன் கட்டிடக் கலை அற்புதத்துக்காகவும் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகிறது.
மலயாட்டூர் நகரில் செயின்ட் தாமஸ் தேவாலயத்தை தவிர சர்ச் ஆஃப் மேரி இமாக்குலேட், செயின்ட் செபாஸ்டியன் சர்ச் போன்ற தேவாலயங்களையும் நீங்கள் பார்க்கலாம். இவைதவிர மலயாட்டூர் நகருக்கு நீங்கள் வரும் போது துர்கா தேவி கோயில், மஹாகனி தோட்டம், மூலம்குழி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வரலாம்.
மலயாட்டூர் நகரில் சிறிய உணவுக் குடில்கள் மற்றும் நிறைய குளம்பியகங்கள் உள்ளன. இங்கு நீங்கள் கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்கலாம். அதோடு திருவிழா காலங்களில் புனித யாத்ரிகர்களின் வசதிக்காக ஏராளமாக தற்காலிக உணவுக் குடில்கள் மலயாட்டூர் நகரில் திடீரென முளைக்கும்.
மலயாட்டூர் நகரம் கொச்சி நகரிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதுடன், அருகாமை நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. மலயாட்டூர் நகரின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்குமாதலால் பயணிகள் இந்த காலங்களில் மலயாட்டூர் நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. எனினும் பனிக் காலம் மலயாட்டூர் நகரை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.