அர்த்தநாரீஸ்வரா கோயில் ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். இங்குள்ள விக்கிரகம் பாதி ஆணும் பாதி பெண்ணுமான அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளிக்கிறது.
சிவனும் பார்வதியுமே முறையே வலமும் இடமுமாக இந்த கோலத்தில் தரிசனம் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணின் முக்கியாமான அங்கமே பெண் எனும் தத்துவத்தை வலியுறுத்துவதுபோல் இந்த தெய்வ உருவம் காட்சியளிக்கிறது.
தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் விரிவான சிற்பக்குடைவு அம்சங்கள் கொண்ட ஸ்தலமாக இந்த கோயிலை இந்திய தொல்லியல் துறை அங்கீகரித்துள்ளது.