மண்டிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமம் இந்த சௌந்த்ரா வாலி ஆகும். பாராகிளைடிங் எனப்படும் சாகசப்பொழுதுபோக்கு அம்சத்துக்கு இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த சாகச அனுபவத்தை நாடி அனேக சாகச சுற்றுலாப்பிரியர்கள் இந்த சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர். சமீபத்தில் ஒரு திபெத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஒரு சிறிய திபெத்திய குடியிருப்பு ஆகியவை இந்த சௌந்த்ரா வாலி பகுதியில் உருவாக்கப்பட்டு வளர்ந்து வரும் ஒரு சுற்றுலாத்தலமாக இந்த கிராமப்பகுதி காட்சியளிக்கிறது.