சிவனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த பாஞ்ச்வக்த்ரா கோயில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையினரால் தேசிய பாரம்பரிய சின்ன ஸ்தலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷிகாரா பாணி கோயிற்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இக்கோயிலில் தனித்தன்மையான சிவன் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சிவன் ஐந்து குணாதிசயங்களை குறிப்பிடும்படியாக ஐந்து முகங்களுடன் இந்த சிலை காணப்படுகிறது. சுகேதி மற்றும் ப்யாஸ் ஆறுகள் சங்கமிக்கும் ஸ்தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் நாடெங்கிலுமிருந்தும் யாத்ரீகர்களை ஈர்த்து வருகிறது.