மண்டி பகுதியில் உள்ள பாலஹ் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ரம்மியமான கிராமம் ரோஹண்டா ஆகும். இது ஓக் மரங்கள், பை மரங்கள் மற்றும் செடார் மரங்கள் நிறைந்த பசுமையான காட்டுப்பகுதியால் சூழப்பட்டு இது அற்புதமான இயற்கை வனப்போடு காட்சியளிக்கிறது. மண்டி மற்றும் சிம்லா நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலை மூலமாக இணைக்கப்பட்டிருப்பதால் இந்த கிராமத்திற்கு எளிதாக செல்ல முடியும்.