புகழ் பெற்ற வரலாற்றுத் தலமான பார்ட்ருஹரி குகைகள், பார்ட்ருஹரி என்ற துறவியின் பெயரையுடை சில குகைகளின் கூட்டுப் பெயராகும். விக்ரமாதித்ய மன்னரின், சிற்றன்னை வழி சகோதரரான பார்ட்ருஹரி என்ற அரசர் மிகச்சிறந்த அறிஞராகவும், கவிஞராகவும் அறியப்படுபவராவார்.
இவரே சமஸ்கிருத மொழியை சாதாரண மானிடனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்திய முன்னோடியாவார். அவருடைய 'வாக்யாபாடியா' என்னும் நூல் சமஸ்கிருத மொழியின் மொழியியல் மற்றும் இலக்கணத்தைப் பற்றி புரிந்து கொள்ள உதவும் முன்னோடி நூலாகும்.
வளமையான இராஜ குடும்பத்தில் பிறந்த அரசரான பார்ட்ருஹரி, உலக இன்பங்களை தேடிச் செல்லும் வாழ்க்கையின் இன்னல்களை நன்றாக அறிந்திருந்தார். ஞானோதயம் அடையும் பொருட்டாக இராஜபோக வாழ்க்கையில் கிடைத்த வசதிகள் மற்றும் தவறான வழிமுறைகள் அனைத்தையும் அவர் துறந்தார்.
அவருடைய இந்த தேடல்களின் முடிவில், பார்ட்ருஹரி குகைகள் என்று அழைக்கப்படும் இந்த இடத்திற்கு வந்தார். இந்த குகைகளைச் சுற்றிலும் நாத் இனத்தவரின் சிறிய கோவிலும், அதனுள்ளே அவர்களின் கடவுள் சிலையும் உள்ளன.
சமஸ்கிருத மொழியை சாதாரண மானிடனும் புரிந்து கொள்ளும் படி செய்த இந்த அறிஞர்-கவிஞரை இன்றளவும் இங்கு வரும் பக்தர்கள் மரியாதையுடன் வழிபடுகின்றனர்.