கி.பி. 9 அல்லது கி.பி. 10-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சாவ்பிஸ் காம்பா என்ற கோவில் இன்றைய கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மனித குலத்தின் வரலாறு பதிவு செய்யப்பட்ட காலத்தின் தொடக்கத்தில் இருந்தே கோவில்களும், மத வழிபாட்டுத் தலங்களும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தன என்று நாம் அறிந்திருக்கிறோம், அதற்கு சாவ்பிஸ் காம்பா கோவில் எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல.
இந்த கோவில் கட்டப்பட்ட காலமே நம்மை வாயைப் பிளக்க வைக்கும் என்றால் மிகையாகாது. இந்த கோவிலின் மாபெரும் நுழைவாயில், கோவிலின் கட்டிடக்கலையையே தூக்கி சாப்பிட்டு விடும் அழகுடையதாகும்.
இந்த நுழைவாயிலின் இருபுறமும் புனிதமான மகாலயா மற்றும் மகாமாயா ஆகிய இரண்டு பெண் காவல் தெய்வங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு பெண் தெய்வங்களின் பெயரும், கோவிலுக்குள் செல்லும் படிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த கோவிலை சுற்றியிருக்கும் சுற்றுச் சுவர்களும், அதனைச் சுற்றியுள்ள இடங்களும, முழுமையான வடிவமைப்புடன் கூடிய நுழைவாயிலுடன் சேர்ந்து இந்த கோவிலை பிரமிக்க வைக்கும் கட்டிடமாக காட்டுகின்றன.
எனினும், இந்த கோவில் கால ஓட்டம் மற்றும் இயற்கையின் சீற்றம் காரணமாக இதன் சுற்றுச் சுவர்கள் இன்று அவ்வளவாக தெரிவதில்லை.