இந்தியாவின் முதல் மார்பிள் கட்டிடமான ஹோசாங் ஷா கல்லறை, ஆப்கானிய கட்டிடக்கலையில் உருவான அற்புத கட்டிடமாகும். நம்புவதற்கரிய சிறப்பு பெற்ற குவி மாடங்கள், வளைவுகள் மற்றும் கற்களின் குறுக்கே செய்யப்பட்ட காற்றோட்ட வேலைப்பாடுகள் ஆகியவைதான் தாஜ் மஹால் உருவாவதற்கு ஊக்கமான இருந்தன.
நீல எனாமல் நட்சத்திரங்கள் மற்றும் தெற்குப்புற நுழைவாயிலில் உள்ள தாமரை ஆகியவை வெண்மை நிறமாக இருக்க வேண்டிய இந்த கட்டிடத்திற்கு வண்ணமூட்டியுள்ளன.
காதலுக்கும், வரலாற்றுக்கும் ஒரு கலைநயமிக்க நினைவுச்சின்னமாக தாஜ் மஹால் இருப்பதைப் போலவே, ஹோசாங்கின் கல்லறையும் தாஜ் மஹாலை உருவகப்படுத்தியது போன்றும் மற்றும் எளிதில் அடையக் கூடிய இடமாகவும் உள்ளது.
மேலும், ஹோசாங் ஷா, மாளவப் பகுதியை ஆண்ட முதல் இஸ்லாமிய அரசர் என்று பெயர் பெற்றவராக மட்டும் இல்லாமல், வேறு பல காரணங்களுக்காகவும் புகழ் பெற்றவராக உள்ளார்.
அவர் மாளவ பகுதியின் அரசரான பின் தன்னுடைய இயற்பெயரான ஆல்ப் கான் என்ற பெயரை மாற்றி விட்டு, ஹோசாங் ஷா என்று பெயரிட்டுக் கொண்டார்.
மாளவப் பகுதியை 27 ஆண்டுகள் ஆண்டு வந்த அவர், தன்னுடைய கலை மற்றும் கட்டிடக்கலை இரசனைகளுக்காக மிகவும் அறியப்படுகிறார்.
மேலும், மண்டுவை, இந்தியாவின் ஒரு திறன் மிக்க மற்றும் பாதுகாப்பான கோட்டை அரண்களில் ஒன்றாக மாற்றிய பெருமையையும் பெற்றுள்ளவராக உள்ளார்.