கிரந்தி-தீர்த் அல்லது ஷ்யாம்ஜி கிருஷ்ணா வர்மா நினைவகம் மண்டிவியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அரேபியா பெருங்கடலுக்கு அருகில் உள்ளன. இந்த நினைவகத்துக்கு அக்டோபர் 4, 2009-ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வர், திரு நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
56,618 சதுர அடியில் அமைந்துள்ள இந்த நினைவகத்தை கட்டி முடிக்க 14 மாதங்கள் ஆயின. இந்த நினைவகம் டிசம்பர் 13-ஆம் தேதி குஜராத் முதல்வரால் இந்த நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த நினைவகம் ஸ்ரீ ஷ்யாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் வாழ்க்கை மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கு அவரின் பங்களிப்பையும் பிரதிபலிப்பதாக இருக்கும். இந்த தியாகி மற்றும் அவருடைய மனைவியான பானுமதி அவர்களின் அஸ்தி இருக்கும் ஜாடி நினைவகத்தில் உள்ள ஸ்ம்ருதி காக்ஷ் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகம் வியாழக்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். இந்த நினைவகத்தில் இந்தியா ஹவுஸ் போல ஒரு இடம், ஒரு நூலகம் மற்றும் சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்ட தியாகிகளை பற்றி படிக்க ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றும் உள்ளது.
மேலும் புகழ் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓவியங்களையும் இங்கு காணலாம்.