மஹாசு கிராமத்தில் நடத்தப்படும் மஹாசு ஃபேர் எனப்படும் இந்த திருவிழா மஷோப்ராவில் பிரசித்தமான ஒரு சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. மஹாசு ஜாத்ரா என்றும் அழைக்கப்படும் இந்த திருவிழா மஷோப்ராவின் முக்கிய தெய்வமான மஹாசு கடவுளுக்காக அனுஷ்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமையில் துர்க்கா தேவி கோயிலுக்கு எதிரே இரண்டு நாட்களுக்கு இத்திருவிழா நடத்தப்படுகிறது.
புராணக்கதைகளின்படி படோலி எனும் பகுதியை ஆண்ட மன்னர் இந்த கிராமத்துக்கு அருகில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சக்ரோத் எனும் இடத்தில் ஒரு கோயிலை கட்டத்துவங்கினார்.
ஆனால் அவர் ஆட்சியை இழந்த காரணத்தால் அந்த கோயில் மக்களால் கட்டி முடிக்கப்பட்டதுடன், ஞாபகார்த்தமாக இந்த மஹாசு திருவிழாவையும் கொண்டாடும் வழக்கமும் பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்த திருவிழாவின்போது ‘நட்டி’ எனப்படும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள் மற்றும் வில்வித்தை போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. தெய்வங்களுக்காக ஆடு பலியிடப்படும் ஒரு சடங்கு நிகழ்ச்சியுடன் இத்திருவிழா முடிவடைகிறது.