கிருஷ்ண ஜன்மஸ்தான் என்றும் அழைக்கப்படும் புகழ் வாய்ந்த கோயிலான கிருஷ்ண ஜன்மபூமி கோயில், இந்தியாவின் மிகப் புனிதமான இந்து வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.
கோயில் வளாகத்தினுள் இருக்கும் சிறு சிறை போன்ற ஒரு அறையில் தான் கிருஷ்ணர் அவதரித்ததாக நம்பப்படுகின்றது. இக்கோயில், ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தின் போது, ஆர்ச்சாவைச் சேர்ந்த ராஜா வீர் சிங் பந்தேலாவினால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.
எனினும், பின்னோக்கிப் பார்க்கையில், இங்கு உள்ள முதல் கோயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ண பகவானின் கொள்ளுப் பேரனால் கட்டப்பட்டது என்றும் ஒரு கதை உலவி வருகின்றது.
இக்கோயிலின் புகழ் ஓங்கி இருந்த காலத்தில், இதன் மகிமை, வார்த்தைகளாலோ அல்லது ஓவியங்களினாலோ விவரிக்க இயலாதவொன்றாக இருந்துள்ளது. ஆனால் முதன் முதலாகக் கட்டப்பட்ட கோயில், முஹமது கஜினியால், 1017 ஏடியில் இன்னும் பல கோயில்கள் மற்றும் புத்த விகாரங்களோடு சேர்த்து அழிக்கப்பட்டது.
இத்தனை வருடங்களில் இக்கோயில் பல்வேறு வகை கட்டுமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. தற்போது உள்ள வளாகம் அச்சு அசல் இந்து கட்டுமான பாணியின் பிரதிபிம்பமாகத் திகழ்கிறது.
ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தின் போது, இக்கோயிலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குலைக்கும் நோக்கில், இதற்கு அடுத்தாற் போல் மிகப் பிரம்மாண்டமான மசூதி ஒன்று கட்டப்பட்டது.