மதுரா அருங்காட்சியகம் நகரத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் சில பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் சில பொக்கிஷங்கள் 3 ஆம் நூற்றாண்டு பிசி -யைச் சேர்ந்தனவாகும்.
இந்த அருங்காட்சியகம் மெத்தென்ற கல்லினால் கட்டப்பட்டுள்ள ஒரு கம்பீரக் கட்டிட அமைப்பாகும். மதுராவில் இருந்தும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்து தொல்பொருள் கண்டுபிடிப்புகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இந்திய நம்பிக்கை மற்றும் மதத்தை பிரதிபலிக்கும் குறிப்புகள், துணுக்குகள், கற்சிலைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதனால் இந்த சேகரிப்புகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
இந்த அருங்காட்சியகம், மதம் மற்றும் பழங்கால இந்தியா பற்றிய தகவல்களை நன்கு விளக்கக்கூடிய கலைப்பொருட்களைக் காண விரும்பும் வரலாற்று ஆர்வலர்கள் பலரை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது. இங்குள்ள கலைப்பொருட்கள், இந்திய கலாச்சாரத்தின் வேறுபட்ட தன்மைகளை கோடிட்டுக் காட்டுகின்ற