மதுரா இந்தியாவின் புனித ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகளை ஈர்க்கக்கூடிய நிகரற்ற பல புராதன கோயில்களின் உறைவிடமாக விளங்குகின்றது. அவ்வாறான ஒரு கோயில் தான் பொடாரா கந்த்தும்.
பொடாரா கந்த் என்ற வார்த்தை “புனித வாயில்” என்பதைக் குறிக்கிறது. இந்த வாயிற்கதவு போன்ற அமைப்பு, மணற்பாறையைக் கொண்டு, புராதன இந்து கட்டுமான பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகம் அழகாகக் கட்டப்பட்டுள்ள பல்வேறு இந்துக் கடவுள்களின் கோயில்கள் மற்றும் சந்நிதிகளால் சூழப்பட்டுள்ளது. பொடாரா கந்த், கிருஷ்ணனின் துணிகளை அவரது தாயார் துவைத்த இடம் என்று கூறப்படுகிறது.
யாத்ரீகர்கள், குருக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்கார்ந்து தங்கள் பிரார்த்தனைகளை முறையிடும் இந்த படி போன்ற அமைப்பு, காணக் கண் கொள்ளாக் காட்சியா