மதுரா-ஆக்ரா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கேஷவ்ஜி கௌடிய மடம் தரிசனத்துக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த மடம் அனைத்து கடவுள்களுக்கும் முதல்வராகப் போற்றப்படும், மதுராவின் உறைவிடக் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீமத் பக்தவேதாந்த நாராயண மஹாராஜா, இந்தி மொழி பேசும் மக்களிடையே உண்மையான பக்தியின் தாத்பர்யத்தை பரப்பும் படி பணிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.
இந்துக்கள் தவிர்த்து, அருள் மற்றும் ஞானம் ஆகியவற்றை பெற வேண்டியும், பகவத் கீதாவில் உரைக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் போதனைகளை புரிந்து கொள்ள விழைந்தும், அயல்நாட்டுப் பயணிகள் இந்த மடத்துக்கு கணிசமான அளவில் வருகை புரிகின்றனர்.