இஸ்கான் கோவிலில் வெவ்வேறு பாணியிலான, அவதாரங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பல தெய்வ விக்ரகங்கள் அமைந்திருக்கின்றன. பிரமாண்டமான இந்த வளாகத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள முக்கிய கட்டிடம் தற்கால சிறந்த கட்டடக் கலை மற்றும் பாரம்பரியம் கலந்து கட்டப்பட்டுள்ளது. ஒரு பெரிய தாமரை வடிவிலான நீர்வீழ்ச்சி சிலையானது கோவிலின் நுழைவு வாயிலை அலங்கரிக்கின்றது.
இந்தக் கோயில் வளாகத்தின் மையத்தில் பெரிய தோட்டத்தில் ஒரு பிற்பகல் வேளையில் சூரியனுக்கு கீழே அமர்ந்து உங்கள் எண்ணங்களைத் துறந்து அமைதியில் உறையலாம். இஸ்கானின் வழிமுறைகள் என்பது சமகால யோசனைகள் மற்றும் பழங்கால தியானத்தின் கலவையாகும்.