பாலர் வம்சத்தை வெற்றி கொண்டதை நினைவு கூறும் வகையில் ராஜேந்திர சோழர் அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரம். இந்நகரம் சுமார் 250 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகரமாக இருந்தது.
இந்த நகரத்தின் பெயருக்கு கங்கையை வென்ற சோழர் என்று அர்த்தமாகும். உண்மையில், எந்த ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த நகரங்களும் இன்றைய நாள் வரையிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
இங்கிருக்கும் சிவன் கோவிலின் வளம், 11-ம் நூற்றாண்டில் தலைநகரமாக இருந்த பொழுது கிடைத்த வளத்தின் நிழல் போன்றதே. இந்த தலைநகரத்திலிருக்கும் சிவன் கோவிலை கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது.
இந்நாள் வரையிலும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த கோவில் சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாகும். இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டதற்காக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைப் பெற்றிருப்பதற்காகவும் புகழ் பெற்றுள்ளது.
இந்த கோவில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கம் 4 மீட்டர் உயரமுடையதாகும். இக்கோவில் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் செப்புப் பட்டைகளின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சோழ வம்சம் மற்றும் அவர்களின் ராஜ்ஜயம் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள், வேறந்த வரலாற்று நூல்களையும் விட சிறப்பான விளக்கங்களை தருவதாக இருக்கும்.
அற்புதமாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் வாயைப் பிளக்க வைக்கும் பிரம்மாண்டமான கட்டிடக்கலை (984-ஆண்டுகள் பழமையானவை) கங்கை கொண்ட சோழபுரத்தை ஒரு முதன்மையான சுற்றுலாத்தலமாக இருக்கச் செய்கிறது.