சிமிலிபல் தேசிய பூங்கா பல தாவர வகைகளுக்கும் விளங்கின வகைகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த காட்டில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் ஓடைகள் பாய்ந்தோடுகின்றன.
இந்த பிரம்மாண்டமான காட்டில் சால் மரங்கள் ஓங்கி நிற்கும். மேலும் முடிவில்லா தூரத்திற்கு புல்நிலங்களை காணலாம். அதனால் வனவிலங்குகளை காண்பது கடினமாக இருக்கும்.
வனவிலங்குகளை கண்டுகளிப்பது மட்டும் நோக்கம் இல்லையென்றால், இங்குள்ள அழகிய நீர்வீழ்ச்சிக்காகவும் இங்கே வரலாம். இங்குள்ள பரேஹிபாணி மற்றும் ஜோரண்டா நீர்வீழ்ச்சிகள் மிகவும் அழகிய தலங்களாகும்.
இதன் பின்னணியில் வனவிலங்குகளை தேடுவது ஒரு வித மகிழ்வை ஏற்படுத்தும். புலிகள், காட்டெருமைகள் மற்றும் யானைகளின் காலடி தடங்களை கண்டு அதற்கு பின்னால் போவது அலுப்புத் தட்டாத ஒரு செயலாகும்.
யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், ஒட்டர், எலி போல் உள்ள மான்கள், காட்டு பன்றிகள், கீரிப்பிள்ளைகள், பறக்கும் அணில்கள், சாம்பார் வகை மான்கள் மற்றும் குறைக்கும் வகை மான்கள் போன்ற விளங்கின வகைகளை இந்த காட்டினில் காண நேரிடலாம்.