கர்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அருகாமையில் மேடக் நகரில் அமைந்திருக்கும் எடுப்பாலய துர்கா பவானி குடி துர்கா பவானி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில்தான் மஞ்சிரா நதி ஏழு ஓடைகளாக பிரிந்து பின்பு மீண்டும் மற்றொரு பகுதியில் இணைகின்றன. இதன் காரணமாகவே 'ஏழு ஓடைகள்' என்று பொருள்படும்படி தெலுங்கு மொழியில் 'எடுப்பாலய' என்று இவ்விடம் அறியப்படுகிறது.
எடுப்பாலய துர்கா பவானி குடி அமைந்திருக்கும் இடத்தில்தான் மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் கொள்ளுப்பேரன் ஜானமேயன் சர்பயாகம் நடத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவராத்திரியின் போது நடத்தப்படும் ஜதரா எனும் திருவிழாவிற்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.