மேடக் நகரில் அமைந்திருக்கும் மேடக் தேவாலயம் 1947-ஆம் ஆண்டிலிருந்து கத்தீட்ரலாக திகழ்ந்து வருகிறது. இந்த தேவாலயம் மெத்தொடிஸ்ட் கிறிஸ்த்தவர்களால் கட்டப்பட்டு, 1924-ஆம் ஆண்டு புகழ்பெற்ற பாதிரியார் சார்லஸ் வாக்கர் ப்ரோஸ்நெட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது ஆந்திராவின் மிகப்பெரிய தேவாலயம் என்ற அழியாப் பெருமையை சுமந்து கொண்டு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
மேடக் தேவாலயம் காத்திக் ரிவைவல் பாணியில் கட்டப்பட்டிருப்பதோடு, இதன் கத்தீட்ரல் 100 அடி அகலமும், 200 அடி நீளமும் கொண்டது. இந்த கத்தீட்ரலில் ஒரே சமயத்தில் 5000 மக்கள் அமர்ந்து வழிபடலாம்.
அதோடு தேவாலயத்தின் தரைதளம் பிரிட்டைன் நாட்டிலிருந்து 6 வெவ்வேறு நிறங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மொஸைக் ஓடுகளை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அற்புதமானது.
இதற்காக பாம்பே நகரிலிருந்து இத்தாலிய கொல்லர்கள் வரவழைக்கப்பட்டு தளம் போடப்பட்டது. இங்கு உள்ள கறைபடிந்த கண்ணாடிகளில் ஏசு பிறந்தது முதல் சிலுவையில் அறையப்படுவது வரையிலான கிறிஸ்துவின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.