நவாப் ஈசாக் கான் என்பவர், தன்னுடைய தந்தையின் நினைவாக கட்டிய இடம் தான் முஸ்தபா கேஸில் என்ற அரண்மனையாகும். இந்த பரந்த கட்டிடத்தை கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின.
சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த சண்டைகள் மற்றும் இயக்கங்களில் நவாப் ஈசாக் கான் மற்றும் அவருடை தந்தை இருவருமே துடிப்பாக சில கலகங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஒரு முறை இவரை ஒரு சிறிய சிறையில் அடைத்தனர், அந்த இடம் இப்போது இந்த கேஸிலின் வளாகத்தில் தான் உள்ளது. நவாப் ஈசாக் கான், அவராகவே இந்த அரண்மனையை இந்திய மற்றும் ஆங்கிலேய கட்டிடக்கலையில் வடிவமைத்திருக்கிறார்.