மீரட் மாவட்டத்திற்குள் அமைந்திருக்கும் முக்கியமான நகரமாக பரிக்ஷித்கார் உள்ளது. இந்த நகரம் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. சமீபத்தில் இங்கு நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் நாணயங்கள் நிரம்பிய பானைகள், பானைகளின் ஓடுகள் மற்றும் பழங்காலத்தைச் சேர்ந்த அலங்காரப் பொருட்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
இந்த நகரத்திற்கென புராண காலப் பெருமையும், ஆரம்பமும் உள்ளது. இந்த இடத்திலிருக்கும் கோட்டை சிதைவுற்ற நிலையில் இருந்தாலும், அது இந்த இடத்தின் பழங்கால முக்கியத்துவம் மற்றும் பெருமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டு உள்ளது.இதற்கு அருகிலுள்ள ரிஷி ஷ்ரிங்கி ஆசிரமம் ஒரு மாபெரும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.