மீரட்டில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான போர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக ஷாஹித் ஸ்மாரக் விளங்குகிறது. இந்த 30 மீட்டர் உயரமான வெண்பளிங்கு கட்டிடம், போரில் இறந்த தியாகிகளின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த இடம் குறிப்பாக முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகத்துடன் தொடர்புடையதாகும். இந்தியாவின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில், இந்திய சுதந்திரப் போரில் இறந்தவர்களின் நினைவாக பலரும் இங்கு வந்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி செல்வது வழக்கம்