அருணாசல பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் சங்லாங் மாவட்டத்தில் இந்த ஜய்ராம்பூர் வீற்றிருக்கிறது. இந்த நகரம் சங்லாங் மாவட்டத்திற்கான ஏ.டி.சி தலைமையகமாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய – மியான்மார் எல்லையில் நாம்சிக் படுகைப்பகுதியில் இது அமைந்திருக்கும் ஜய்ராம்பூர் பரந்த பசுமை மாறா வெப்பப்பிரதேச மழைக்காடுகளை பெற்றிருக்கிறது. மலைநகரமான இங்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமான இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். ஹொலாக் கிப்பன் குரங்குகள் இங்கு ஏராளம் வசிக்கின்றன.
ஜய்ராம்பூர் நகரம் கனிம வளம் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இந்நகரிலுள்ள உபசரிக்கும் பண்பு வாய்க்கப்பெற்றவர்களாக உள்ளனர். அமைதியான வாழ்க்கை முறை மற்றும் சூழல் இங்கு நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் தங்களது கவலைகளை மறந்து பொழுதுபோக்கலாம். 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜய்ராம்பூரின் மக்கள் தொகை 5918 ஆக உள்ளது. மேலும், இந்நகரின் எழுத்தறிவு சதவீதம்
71% ஆக உள்ளது. இது சராசரி இந்திய எழுத்தறிவை (59%) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டங்கா எனப்படும் பூர்வகுடி இனத்தார் இந்த நகரில் அதிகமாக வசிக்கின்றனர்.
இதில் பல உட்பிரிவுகளும் உள்ளன. இவர்கள் பொதுவாக கடின உழைப்பாளிகளாக உள்ளனர். தற்போது பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகிய மதப்பிரிவுகளை இவர்கள் பின்பற்றுகின்றனர். விவசாயமே இவர்களது பிரதான தொழிலாக உள்ளது.