அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் இந்த நம்சாய் நகரமும் ஒன்றாகும். ‘லேண்ட் ஆஃப் தெ கோல்டன் பகோடா’ என்று இந்நகரம் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.
திஹிங் ஆற்றுக்கருகே லோஹித் மாவட்டத்தில் இந்த நம்சாய் நகரம் அமைந்துள்ளது. நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் வணிகர்கள் இந்நகரத்துக்கு விஜயம் செய்வதால் இது வேகமாக வளர்ந்து வருகிறது. ஆதிகுடி கலாச்சாரம் மற்றும் நவீன கலாச்சாரம் ஆகிய இரண்டையுமே இந்நகரத்தில் காண முடிகிறது.
நம்சாய் நகரத்தில் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 660.37 மீ நீளமுள்ள பாலம் ஒன்று திஹிங் ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கிறது. இந்நகரத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.
பாரம்பரியமான பழக்கவழக்கங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இம்மக்கள் அருணாசல பிரதேச மாநிலத்திலேயே நாகரிகம் மிகுந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
இம்மக்களின் கலாச்சாரம் பெருமளவில் தாய்லாந்து கலச்சாரத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நாகரிகம் மற்றும் முன்னேற்றம் போன்றவற்றில் இந்நகர மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.