ஜூலானோட்சவம் என்பது இங்கிருக்கும் மூன்று கோவில்களில் நடக்கும் இந்துத் திருவிழாக்கள். ஸ்ரீ துவரகாதேவி கோவில், கங்கை யமுனா சரஸ்வதி கோவில் மற்றும் குஞ் புவன் கோவில் என இம்மூன்று கோவில்களில் விமரிசையாக நடக்கும் இத்திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். பொதுவாக வெயில் காலத்தில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது.